Saturday, January 16, 2010

வேலைப் பளு

காலம் நெருக்குகிறது...
பணி திட்ட பட்டியலோ
தலை முதல் கால் வரை
என்னை பைத்தியமாய் விரட்டும்....

அவற்றை சரியான நேரத்திற்கு
வழங்க வேண்டும் என்பது
கவலை அளிக்கும் காரியம்..
அவர்கள் எதற்காவது தீர்வு
காண்பார்களா என்பது சந்தேகமே...

விடுமுறை நாட்களிலும்
இரவு நேரங்களிலும்
காத்திருக்கும் குடும்பம்
வெறுத்து சலித்து விட்டது...
'குடும்பம்' சண்டையிட
தயாராக இருக்கிறது...

கை அரிக்கிறது...
தலை முடியை பிய்த்து
கொள்ள முயன்றால்
அட அநியாயமே....
அங்கே முடியே இல்லை....

- அட்மிரல் மோகன் தன் பணி குறித்து(டாக்டர். அப்துல் கலாமின் அக்னி சிறகில்)

No comments:

Post a Comment