Saturday, January 16, 2010

ப‌டித்த‌தில் பிடித்த‌து...க‌விக்கோ ப‌க்க‌ங்க‌ள்

இறைவா...
*********
* இறைவா...
நான் பாவம்
செய்கிறேன்...
அப்போதாவது
என்னை கவனிக்க மாட்டாயா? என்ற ஆசையில்

*இறைவன் படைக்க
விரும்பியதற்கு
காரணம் காதல்தான்

*கல்லிடம் கூட
கடவுளை காண்பவன்
மனிதனிடத்தில் காணமல் போவதேன்?

* இறைவா..
ஒவ்வோர் அழகும் உன்னிடம்
ஏறி வரும் படிகள்...

* பக்தியின் வெளிப்பாடு
பூசை ஆகாமல்
தொண்டு ஆகும்போது
இறைவன் தரிசனம் ஆகிறான்...

*இறைவா..
உன்னை காண ஆசை பட்டேன்...
கண்களையே திரை ஆக்கி விட்டாயே...

*இறைவா...
என் தேவைகளையெல்லாம் நிறைவேற்றிவிடாதே...
அப்புறம் உன்னை நான்
மறந்துவிடுவேன்....

*நாம் கடவுளை தேடுகிறோம்
கடவுள் நம்மை தேடி கொண்டு இருக்கிறார்...

*இறைவன் ஏன் ஒளிந்து இருக்கிறான்...
எதாவது குற்றம் செய்து இருப்பானோ?

*இறைவன் இசைக்கும் பாடலில்
பாவமும் ஒரு சுரம் தான்...

*இந்த காலத்தில்
வீடு கிடைப்பது
கஷ்டம் ஆகிவிட்டது
இறைவனுக்கும்....

-------------------------------------------------------
ஒரு தலை காதல்...
*******************
*உன்னை பார்க்கும் போதெல்லாம்
உளறுகிறேன்...
உலகம் அதை கவிதை என்கிறது...

*பிறர் இதயங்களில்
விருந்தாளியாகவே
தங்குகிராயே...காதலே...
உனக்கென்ன...வீடில்லையா?

*நான் உன்னருகில் இருக்கும் போது
என்னில் இருந்து தூரமாகவே இருக்கிறேன்...

*ரகசியத்தை காப்பாற்ற முடியாதவன்
கவிஞன்...

*புகைப்படம் ஏன் எடுக்கிறாய்...
ஒவ்வொரு இதயத்திலும் நீ வெவ்வேறு
ஓவியமாய் இருக்கிறாய்...

*மரணம்...
கனவுகளின் தொந்தரவு அற்ற தூக்கம்...

*மூளையின் தெருக்களில்
அலைந்து களைப்பு அடையும் போது
உன் நினைவு என்ற நிழலில்
இளைப்பாறுகிறேன்...

*மனம் அழுக்காகும் போதெல்லாம்
கவிதைகளில் நீரடுகிறேன்...

*காதல் தாகம்
கண்ணீர் குடித்தே அடங்கும்...

*உன்னை நேரில் கண்டால் கனவு
காண்கிறேன்..
கனவில் கண்டால் திடுக்கிட்டு
விழித்து கொள்கிறேன்....

* இசை கேட்டு வாழ்பவனுக்கு
புல்லாங்குழலின் வேதனை தெரியாது...

*உதடு கிடைக்காத புன்னகை நான்...

*உன் கண்ணை மீன்(கயல்) என்றார்கள்...
ஆனால்
அதுவோ வலை வீசுகிறது...

*உன்னால் எரிந்து போனவர்களின்
சாம்பலில் நீ கண் மை
தயாரிக்கிறாய்...

* என் எதிரில் நீயா..
இது கனவு எனில் நான் விழிக்க விரும்ப வில்லை...
இது நனவு எனில் நான் தூங்க விரும்ப வில்லை...

*பெண்
என்பவள் இலட்சியம் அல்ல...
வழிகாட்டி மரம்...
பலர்
அதன் அடியிலேயே
வசிக்க தொடங்கிவிடுகிறார்கள்...

* உன் நெற்றி பிறை பார்க்கும் போதெல்லாம்
நான் பண்டிகை கொண்டாடுகிறேன்

* பிரிவில் சந்திப்பின் ஏக்கம்
சந்திப்பில் பிரிவின் அச்சம்...
மனமே...உனக்கு
இரண்டிலும் நிம்மதி இல்லை...

* வீணைக்குள் சிறைப்பட்டு கிடக்கிறேன்...
உன் விரல்களை எதிர்பார்த்தபடி...
-------------------------------------------

--- க‌விக்கோ (ரகசியப்பூ

No comments:

Post a Comment