Friday, December 10, 2010

மூளை : மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள முடிச்சு


மூளை...
************
உடம்பில் உள்ள உன்னத படைப்பான மூளையைப் பற்றி காரில் தனியாக I91 நெடுஞ்சாலையில் யோசித்து போய்கொண்டு இருந்தேன். என் தங்கை சொன்னது சரியாகத்தான் உள்ளது...
" டேய்...கார்ல போகும்போது எப்பவும் ஜாக்கிரதையா போ....பேசிகிட்டே,பாராக்கு பாத்துக்கிட்டே போகாத...உன்னையும் அறியாமலே உன் கண்ணும் காலும் மூளையும் தானாகவே முன்னாடி போகும் வண்டிய பாத்து பேசிக்கொள்ளும்...இது எல்லா டிரைவர்ஸ்க்கும் காமன் டா" அப்டின்னு சொன்னா...அது உண்மைதான்...கொஞ்சம் எக்ஸ்பீரியென்ஸ் வந்துட்டா, நம்மை அறியாமலே கார் ஓடுகிறது..ஓட்டப்படுகிறது....மூளை, கண்ணுக்கும் காலுக்கும் செய்திகளை ஒரு நொடியின் மில்லியனின் ஒரு பங்கு நேரத்தில் விரைவாக அனுப்புகிறது. அதே நேரத்தில், நமது காதை வைத்து இசையை ரசிக்க வைக்கிறது....இதயத்தையும் நம் நினைவுகளையும் பாடல் வரிகள் மூலமாக வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு செல்கிறது...வாய் ஏதோ முணுமுணுக்கிறது...நமது கை, கடிகார திசை, கடிகார எதிர் திசையில் சுழல்கிறது....வலது ஆட்காட்டி விரல் அவ்வப்போது அடிமூக்கிற்கும் மேலுதட்டுக்கும் இடையே கோலம் போடுகிறது...கார் போக வேண்டிய திசையில் பயணிக்கிறது" மூளை இல்லாதவன் ஏதோ கிறுக்குன மாதிரி இருக்கிறதா நீங்க நெனைச்சா உடனே ஓட்டுனர் உரிமம் பெற்று உங்கள் மூளையை பரிசோதனைக்கு உட்படுத்தலாம்..


No comments:

Post a Comment