Friday, February 26, 2010

விண்ணை தாண்டி வருவாயா என் விமர்சனம்

*********************************************************************
விண்ணை தாண்டி வருவாயா என் விமர்சனம்
**********************************************************************
* முதலில் மனோஜ்(ஒளிப்பதிவு)க்கு ஒரு ஷொட்டு. த்ரிஷா,கேரளா,மால்டா என அசத்திவிட்டார். கண்ணில் ஒட்டி கொண்டது...அவ்ளோ அழகு
* ரஹ்மான் சார். பின்னணி மற்றும் பாடல் அருமை.....கலர்ஸ் அருமை.
** சிம்பு(கார்த்திக்): அவ்ளோ முதிர்ச்சி நடிப்பில்.நீ விரல ஒளிச்சு வச்சுட்டு இந்த மாதிரி ஸ்கோப் உள்ள கேரக்டர்ல நடிப்பா.
*** த்ரிஷா(ஜெஸ்ஸி): அழகு சொல்ல வார்த்தை இல்லை. திரிஷாவா இது என சில இடங்களில் என்னையும் மறந்து ரசித்தேன்.திரிஷாவை இவ்ளோ அழகாக காட்டியதற்கு கௌதமிற்கு பாராட்டுக்கள். ஜெஸ்ஸி: குழப்பமான காதலி. காதல் என்பது என்னவென்று தெரியாமல் குழம்பி, பெரும்பாலான பெண்களின்(80%) குணத்தை கடைசியில் தெரிவித்தாள்.பயங்கர கோபம் ஜெஸ்ஸி மீது.
***கௌதம்: இறுதியில் மனதை அழு(த்)தும் காட்சி இருக்கும்..சில வினாடிகள் அது தூக்கி போடும் என்று படம் வரும் முன்னரே சொன்னார். உண்மைதான்.ஜெஸ்ஸி முதல் கல்யாணம் வேண்டாம் என வேறு அழுத்தமான காரணம் சொல்ல வைத்து இருந்தால் ஜெஸ்ஸி மீது மதிப்பு கூடி இருக்கும்...அதை கார்த்திக் மீது காதல் என்ற காரணம் என்று சொல்லி குழப்பமான காதலியின் மீது கடுங்கோபம் உண்டாக்க காரணம் இவர்தான்.

நளினி ஸ்ரீராம்: திரிஷாவின் அழகிற்கு ஒரு காரணம் இவர்தான். நன்றி நளினி. என்னோட கல்யாணத்துக்கு என் வைப் க்கு சாரி டிசைன் அண்ட் செலக்சன் நீங்கதான் பண்ணனும்.....அனைத்து உடைகளும் அவ்ளோ அருமை திரிஷாக்கு....

*** சில பிடித்த வசனங்கள் : "ஒப்பந்தம் என்பது உடைப்பதற்கே".."நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்" "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி னு சொல்லுதா?"

*** பிடிக்காதவை: ஒரே மாதிரியான வசனங்கள் பல தடவை சோர்வடைய வைக்கிறது...மிகவும் மெதுவான இரண்டாவது பாதி திரைக்கதை, அமெரிக்க ஜெஸ்ஸி..பாடல் ஒளிப்பதிவு: எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருந்த ஒரு சோர்வு.

No comments:

Post a Comment