Friday, October 1, 2010

எந்திரக் காய்ச்சல்

ஒரு படம் பாத்துட்டு வந்த பிறகு அதோட தாக்கம் இருந்து அதைப்பற்றியே நினைக்க/பேச வைத்தால் அங்கு தான் அந்த படத்தின் வெற்றி ஆரம்பிக்கிறது....அந்த இயக்குனர் தான் சிறந்த இயக்குனர்...அந்த கலைஞன் தான் நல்ல கலைஞன்...அதுதான் உண்மையான வெற்றி.நள்ளிரவில் படம் பார்த்து வந்த பின்பு தூங்கும்போது கூட கனவிலும் காட்சிகள் வந்து நம்மை எழுப்புகிறது என்றால் அது மின்சார கண்ணனால் மட்டும்தான் முடியும்...

இந்த படத்தை பற்றி எவ்வளவோ எழுதலாம்...எழுதுவேன்....முதல் முறை சூப்பர் ஸ்டார் படம் முதல் ஷோ பார்த்த ஒரு பரவசம்....ஒரு உலகத்தரம் வாய்ந்த படத்தை பார்த்த குதூகலம்...கொண்டாட்டம்...களிப்பு...சந்தோசம்.

அமெரிக்கா என்ன...அமிஞ்சிகரை என்ன...சூப்பர் ஸ்டார்னு வந்துட்டா நாங்க எல்லாம் ஒண்ணுதான்னு எவ்ளோ பெரிய பொசிசன்ல உள்ள எல்லோரும் ஆரவாரத்துடன் தியேட்டர் அதிர, சீட் கிடைக்காமல் தரையில் உக்காந்து சந்தோசத்துடன் பார்த்த ஒரு படம்னா அது நம்ம எந்திரன் தான்.

வார்த்தைகள் இல்லை வருணிக்க...விமர்சிக்க...

விதி என்ற ஒன்று உள்ளது...இல்லை என்றால், கலை ஞானிக்கு எழுதிய கதை, கிங் கானிடமிருந்து வந்து தலைவர் தான் நடிக்க வேண்டும் என்று இருந்து இருக்காது...கமல் பக்தனான நானே சொல்கிறேன்..எந்திரன் - தலைவர் தவிர யார் நடித்தாலும் இவ்ளோ பெஸ்ட்டா வந்து இருக்காது...

இந்த படத்த பாத்துட்டு வந்து பிறகு ஒரு வருத்தம்,ஆதங்கம், பதற்றம்...என்னவென்றால், இவ்ளோ அற்புதமா ஒரு டிரன்ட் செட் பண்ணின பிறகு தலைவர அடுத்து இயக்க போவது யார்னு? ஷங்கர் தவிர வேற யாராச்சும் தலைவர அடுத்த உயரத்துக்கு கொண்டு போக முடியுமான்னு ஒரு பரிதவிப்பு.

ஓகே...வர்ணிக்கலாம்...கதை...ரொம்ப சிம்பிள் ஆன லவ் ஸ்டோரி தான்...ஆனா, திரைக்கதை மற்றும் டெக்னிகல் விஷயங்கள் படத்த பத்தி இப்டி உக்காந்து எழுத வச்சு இருச்சு...


தலைவர் நடிப்ப என்னனு சொல்ல...'மே மே மே' னு ஆட்டு குட்டி மாதிரி கத்திகிட்டு வசீகரன கண்டுபிடிக்கிற ஒரு சீன் போதும்...டாப் கியர் ல எகிறுது...கடவுள் இருக்கிறாராங்கற கேள்விக்கு பதில் சொல்லும்போதும்,கடைசில ரோபோவா இருக்கிறது எவ்ளோ நல்லது வசனம் பேசும்போதும் உள்ளத்தை அப்டியே அள்ளிட்டு போய்டுறார்.....பத்ரகாளி வேசத்துல வரும்போதும்(unexpected scene - தியேட்டரே சாமி ஆடுது),ஐசோட லவ்வ உணரும்போதும், மிலிட்டரி ஆபீசர் கிட்ட கவிதை சொல்லும் போதும், வசீகரன் சிட்டியோட ஆன்சர்ச(answers) ரசிக்கும் போதும், ஐசோட சிட்டி டான்ஸ் ஆடும்போதும் frame by frame ரசிக சீமான் அப்டின்னு நிரூபித்துவிட்டார்...ஹாப்பி தீவாளி போக்ஸ்(HAPPY DIWALI FOLKS) னு சொல்லும்போது அப்டியே தியேட்டர் அதிருது... உலக நாயகனுக்கும் தனக்கும் உள்ள நட்பை சிவாஜியில் புகுத்தியது போல இந்த படத்திலும் ஒரு சீன்...தேங்க்ஸ் தலைவா.... Proud to be a fan you both...

என்ன பொறுத்த வரைக்கும் மத்த கேரக்டர் எல்லாமே ஊறுகாய் தான்...தலைவர் தான் மெயின் டிஷ், மெயின் கறி, ஸ்வீட் எல்லாமே..

இந்த மாதிரி காஸ்ட்லி மூவிக்கு ஐஸ் தவிர வேறு யார் தலைவருக்கு ஜோடியா இருக்க முடியும்.. ஐஸ், இராவணன் விட ரொம்ப அழகு..

ARR, Rathavelu, Antony, Sujatha,Shankar,Kaarkki,Peter Hein and Crew, Dance Masters என எல்லோருமே பின்னி பெடல் எடுத்து இருக்காங்க.

நிதி இருந்தால் மட்டுமே இது எல்லாமே சாத்தியம்..இது சத்தியம்... ஐ மீன், கலா நிதி, உதய நிதி, தயாநிதி.....ஹாட்ஸ் ஆப் கலாநிதி அவர்களே....600 கோடி எதிர்பார்க்கிறீர்களாமே...அதுக்கும் மேலயும் கெடைக்கும்...

ஷங்கர்ஜி - இன்னொரு ஹீரோ. தான் நினைத்த எல்லாவற்றையும் தமிழ் பார்முலா சேர்த்து கிராபிக்ஸ் உதவியுடன் ஒரு தாண்டவமே ஆடிவிட்டார்...கதை,திரைக்கதை,வசனம், சண்டை வடிவாக்கம் என எல்லா துறைகளிலும் பூந்து வெளயாண்டுட்டார்...இவருடைய 10 படங்களில் இதுதான் டாப்....

ஒரே ஒரு ஆசை...சத்யம், ஐ மாக்ஸ் போன்ற தியேட்டர்ஸ்ல இந்த படத்த ஒருக்கா அனுபவிக்கனும்...

குழந்தை முதல் முதியவர் வரை(கலைஞர் உட்பட) எல்லோரும் பாக்க வேண்டிய படம்...

இன்னும் நெறைய எழுதுவேன் அடுத்த ஷோ பாத்துட்டு வந்த பிறகு....

A Feel Best Movie and A must Watch one with Family...

- ரசிகன் டா


3 comments: